» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
வெள்ளி 30, ஜூலை 2021 11:23:15 AM (IST)
தூத்துக்குடியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 30) சனிக்கிழமை நகரின் சில பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி நகர் மின் விநியோகம் செயற்பொறியாளர் ஜெயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு தூத்துக்குடி சிப்காட் துணை மின்நிலையத்தில் நாளை (31.07.2021) சனிக்கிழமை 110 கே.வி பிரேக்கர் புதியதாக மாற்றும் பணி மற்றும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சின்னகண்ணுபுரம் பகுதிகள், புதூர் பாண்டியாபுரம், அகில இந்திய வானொலி நிலையம், சிப்காட் வளாகம், கனேசன் நகர், ராஜிவ் நகர், மில்லர்புரம் பகுதிகள், மடத்தூர், அஞ்சல் மற்றும் தொலைதொடர்பு குடியிருப்புகள், ராஜகோபால் நகர், 3வது மைல், பத்திநாதபுரம், சங்கர் காலனி, எப்சிஐ குடோன் பகுதிகள், நிகிலேசன் நகர், இபி காலனி, டைமண்ட் காலனி, மதுரை பைபாஸ் ரோடு, ஏழுமலையான் நகர், ஆசிரியர் காலனி, சில்வர்புரம், பசும்பொன் நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், கிருபை நகர், பால்பாண்டி நகர், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரையில் மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.