» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஜெயராஜ் - பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் : கனிமொழி எம்பி அஞ்சலி!
செவ்வாய் 22, ஜூன் 2021 12:15:32 PM (IST)
சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது திருவுருவ படத்திற்கு கனிமொழி எம்பி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த ஆண்டு காவல் துறையினர் ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை காவல் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாக தாக்கி சிறையில் அடைத்தனர். கோவில்பட்டி சிறையில் இருவரும் அடுதடுத்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல்துறையினர் கைது செய்யப்பட்டனர். மேலும், வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் ஜெயராஜ், பெனிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, சாத்தான்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களது திருவுருவ படத்திற்கு கனிமொழி எம்பி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இல்லத்திற்கு சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி எம்பி, ஆறுதல் கூறினார். மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் உடன் சென்றனர்.