» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் கார் கண்ணாடி உடைப்பு: 3பேர் கைது

செவ்வாய் 22, ஜூன் 2021 8:05:12 AM (IST)

தூத்துக்குடியில் கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜாமேஷ் (64). இவர் தூத்துக்குடி கந்தன் காலனியில் ஜெயச்சந்திரன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்நிலையில் ஜெயச்சந்திரன், தபால்தந்தி காலனியை சேர்ந்த யோகேஷ் தாவீது சத்யா (21) என்பவரின் தாயை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரம் அடைந்த யோகேஷ் தாவீது சத்யா மற்றும் அவரது நண்பர்கள் பிரவீன் (23), போல்டன்புரத்தை சேர்ந்த சாம்டேவிட் (21), இம்மானுவேல் ஆகியோர், ஜாமேஷ் குடியிருக்கும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொலைமிரட்டல் விடுத்து உள்ளனர். வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர். இது குறித்து ஜாமேஷ் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேஷ் தாவீது சத்யா, பிரவீன், சாம்டேவிட் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory