» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கல்!!

திங்கள் 21, ஜூன் 2021 4:28:47 PM (IST)



சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடி அமெரிக்கன் மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டது. 

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு 1200 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடி அமெரிக்கன் ஆஸ்பத்திரிக்கு, தூத்துக்குடி மாவட்ட பழைய மாணவர் சங்கம் சார்பில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 25 கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி, முன்னாள் மாணவர் சங்க துணைத் தலைவர் டிஆர் தமிழரசு தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சியில் மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி கிளை செயலாளர் டிஆர் பாலன், அமெரிக்கன் மருத்துவமனையின் முதன்மை நிர்வாகி லிஸ் ஜான்-யிடம் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தலைவர் பெனோ வென்சர் ரோச், துணைத் தலைவர் மைக்கேல் மோத்தா, மற்றும் மருத்துவமனை தாளாளர் சுசில், செவிலியர் கண்காணிப்பாளர் வந்தனா, துணை நிர்வாகி பிந்து, மருத்துவ பொறுப்பாளர் ஜோசியா ரோஸ், எக்ஸேர பொறுப்பாளர் மரிய சேவியர் அமலி உட்பட பலர் கலந்து கொண்டனர். 


மக்கள் கருத்து

kumarJun 21, 2021 - 06:15:35 PM | Posted IP 108.1*****

nall visayam....ithai arasu maruthuvamaniku valangiirunthal sirappaga irunthirukum....

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory