» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விபத்தில் சிக்கிய இளைஞர்களுக்கு ஆட்சியர் உதவி - பொதுமக்கள் பாராட்டு!!
வியாழன் 8, ஏப்ரல் 2021 8:05:44 PM (IST)
தூத்துக்குடியில் பைக் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த 2 இளைஞர்களுக்கு ஆட்சியர் மனித நேயத்துடன் உதவினார்.
தூத்துக்குடியில் திருச்செந்தூர் மெயின் ரோட்டில், சத்யா நகர் பாலம் அருகே மோட்டார் பைக்கில் சென்ற இரண்டு இளைஞர்கள், எதிர்பாராத விதமாக பைக் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த 2 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சம்பவத்தை கண்டு உடனடியாக காயம் அடைந்த 2 பேரையும் தனது காரிலேயே ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்க டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியரின் மனித நேயத்தை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் காயம் அடைந்தவர்கள் முக்காணியை சேர்ந்த சிவசக்தி மற்றும் அவரது நண்பர் என்பது தெரியவந்து உள்ளது. இதுகுறித்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து காயமடைந்த 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் வாலிபர் கைது
புதன் 21, ஏப்ரல் 2021 10:46:59 AM (IST)

தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார்
புதன் 21, ஏப்ரல் 2021 8:51:51 AM (IST)

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு
புதன் 21, ஏப்ரல் 2021 8:44:16 AM (IST)

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு
புதன் 21, ஏப்ரல் 2021 8:34:51 AM (IST)

மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது: மினி லாரி பறிமுதல்
புதன் 21, ஏப்ரல் 2021 8:30:46 AM (IST)

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் திடீர் போராட்டம்
புதன் 21, ஏப்ரல் 2021 8:28:25 AM (IST)

ராஜாராம்Apr 8, 2021 - 09:23:19 PM | Posted IP 162.1*****