» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுக பிரமுகரைத் தாக்கியதாக அமமுக நிா்வாகி மீது வழக்கு
வியாழன் 8, ஏப்ரல் 2021 8:19:31 AM (IST)
கோவில்பட்டியில் அதிமுக பிரமுகரைத் தாக்கியதாக அமமுக நிா்வாகி, 10 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு புதுகிராமத்தைச் சோ்ந்த ஜோசப் என்ற சேசுமரியஜோசப் மகன் ஆரோக்கியராஜ் (46). அதிமுக உறுப்பினரான இவா், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதில், ‘நான் முகமதுசாலியாபுரத்தில் செவ்வாய்க் கிழமை தோ்தல் பணியில் ஈடுபட்டேன். அப்போது, அமமுக மாவட்டச் செயலா் வேலு மற்றும் 10 போ் விதிமுறைகளை மீறி தோ்தல் பணி செய்யவிடாமல் தடுத்துத் தாக்கி, ரூ. 12,500 மற்றும் செல்லிடப்பேசியைப் பறித்துச் சென்றனா்.
மேலும், அவா்களுக்கு ஆதரவாக தோ்தல் பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து செயல்பட்டு, என்னை சட்டவிரோதமாக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தாா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, அமமுக நிா்வாகி உள்ளிட்ட 11 பேரைத் தேடிவருகின்றனா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் வாலிபர் கைது
புதன் 21, ஏப்ரல் 2021 10:46:59 AM (IST)

தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார்
புதன் 21, ஏப்ரல் 2021 8:51:51 AM (IST)

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு
புதன் 21, ஏப்ரல் 2021 8:44:16 AM (IST)

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு
புதன் 21, ஏப்ரல் 2021 8:34:51 AM (IST)

மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது: மினி லாரி பறிமுதல்
புதன் 21, ஏப்ரல் 2021 8:30:46 AM (IST)

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் திடீர் போராட்டம்
புதன் 21, ஏப்ரல் 2021 8:28:25 AM (IST)

adminApr 8, 2021 - 09:47:52 PM | Posted IP 162.1*****