» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மருத்துவமனையிலிருந்து கனிமொழி எம்பி டிஸ்சார்ஜ்!!
புதன் 7, ஏப்ரல் 2021 4:14:34 PM (IST)
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த திமுக எம்.பி. கனிமொழி இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, முதலில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
பின்னா், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். அடுத்த 5 நாள்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர். முன்னதாக, கரோனா பாதிக்கப்பட்ட நிலையிலும் பாதுகாப்பு கவச உடை அணிந்து நேற்று மாலை கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் கனிமொழி வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார்
புதன் 21, ஏப்ரல் 2021 8:51:51 AM (IST)

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு
புதன் 21, ஏப்ரல் 2021 8:44:16 AM (IST)

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு
புதன் 21, ஏப்ரல் 2021 8:34:51 AM (IST)

மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது: மினி லாரி பறிமுதல்
புதன் 21, ஏப்ரல் 2021 8:30:46 AM (IST)

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் திடீர் போராட்டம்
புதன் 21, ஏப்ரல் 2021 8:28:25 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 170 பேருக்கு கரோனா தொற்று உறுதி
புதன் 21, ஏப்ரல் 2021 8:26:05 AM (IST)
