» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
திமுக - அதிமுக மோதலால் வாக்குப்பதிவு நிறுத்தம் : தூத்துக்குடி, கடம்பூரில் பரபரப்பு
செவ்வாய் 6, ஏப்ரல் 2021 11:45:17 AM (IST)
தூத்துக்குடி, கடம்பூரில் உள்ள வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கடம்பூர் அருகே அருகேயுள்ள மலைப்பட்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் இன்று 8.50 மணியளவில் திமுகவினர் சிலர் வயதான பெண்மணியை தூக்கி வந்துள்ளனர். இதற்கு அதிமுக ஏஜெண்டுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அதிமுக - திமுகவினர் இடையே வாக்குச்சாவடிக்குள் தகராறு மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு காலை 9 மணி முதல் 9.30 மணிவரை அரை மணி நேரம் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது. தேர்தல் அதிகாரிகள் கடம்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் 9.30 மணிக்கு மேல் வாக்குப் பதிவு நடைபெற்றது.
தூத்துக்குடியில்
தூத்துக்குடி டூவிபுரத்தில் டிஎன்டிஏ பள்ளியில் உள்ள 234வது வாக்குச் சாவடியில், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்க வந்தனர். அப்போது சிலரது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அதிமுகவினர் அதிகாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சுமார் 1 மணி நேரம் வாக்குப் பதிவு நிறுததப்பட்டது. இதற்கு திமுகவினர் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து டவுண் டிஎஸ்பி கணேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்ததை நடத்தினர். இதையடுத்து வாக்குப் பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார்
புதன் 21, ஏப்ரல் 2021 8:51:51 AM (IST)

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு
புதன் 21, ஏப்ரல் 2021 8:44:16 AM (IST)

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு
புதன் 21, ஏப்ரல் 2021 8:34:51 AM (IST)

மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது: மினி லாரி பறிமுதல்
புதன் 21, ஏப்ரல் 2021 8:30:46 AM (IST)

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் திடீர் போராட்டம்
புதன் 21, ஏப்ரல் 2021 8:28:25 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 170 பேருக்கு கரோனா தொற்று உறுதி
புதன் 21, ஏப்ரல் 2021 8:26:05 AM (IST)
