» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி விளையாட்டுக் கழகம் சார்பில் மினி மாரத்தான் போட்டி
திங்கள் 8, மார்ச் 2021 4:11:02 PM (IST)

ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி விளையாட்டுக் கழகம் சார்பில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி விளையாட்டுக் கழகம் 33ம் ஆண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான மினி மாரத்தான் போட்டி வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. வ.உ.சி விளையாட்டுக் கழக தலைவர் சாமுவேல் தலைமை வகித்தார். துணை தலைவர் யோகராஜ், ஆலோசகரும், தமிழாசிரியருமான முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர்களுக்கு 10 கி.மீ, மாணவிகளுக்கு 5 கி.மீ, சிறுவர், சிறுமிகளுக்கு 3 கி.மீ துõரமும் இலக்காக நிர்ண யிக்கப்பட்டது. மாணவர்களுக்கான 10 கி.மீ போட்டியை கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் துவக்கி வத்தார். இதில், முதல் 3 இடங்களையும் ஸ்ரீவைகுண்டம் கே.ஜி.எஸ் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் பார்வதி நாதன், பொன் இசக்கி, முத்து இசக்கி ஆகியோர் பிடித்தனர். அவர்களுக்கு சிலோன் காலனி டிடிபிஎஸ் காண்ட்ராக்டர் தில்லைநாயகம், கீழகூட்டுப்பண்ணை அதிமுக பிரமுகர் சீனிராஜ், ராஜாவின்கோவில் பஞ்., தலைவர் அன்புராஜ் ஆகியோர் பரிசு வழங்கினர்.
மாணவிகளுக்கான போட்டியை புளியம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர் துவக்கி வைத்தார். இதில், முதல் மற்றும் 3ம் இடத்தை புதூர் இந்து நாடார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த கோகிலா, சங்கீதா ஆகியோரும், 2வது இடத்தை காட்டு நாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளி ஜெயபிரதாவும் பிடித்தனர். அவர்களுக்கு ஓட்டப்பிடாரம் தொடக்க கூட்டுறவு வங்கி தலைவர் பெரியமோகன், ஓட்டப் பிடாரம் வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவனத் தலைவர் எல்கே முருகன், பரிவில்லிக்கோட்டை பஞ்., செயலாளர் பழனிச்சாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
சிறுவர், சிறுமிகளுக்கான 3 கி.மீ போட்டியயை தூத்துக்குடி மாவட்ட தடகள சங்க செயலாளர் பழனிச்சாமி துவக்கி வைத்தார். இதில், மாணவர்கள் பிரிவில் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் சக்திவேல், முருகேஸ்வரன், வெற்றிவேல் ஆகியோர் முதல் 3 இடங்களைப் பிடித்தனர். சிறுமிகள் பிரிவில், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அபிந யா, புதியம்புத்தூர் பிரசன்னா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த லட்சுமிபிரியா, கீழஈரால் ஆக்ஸ்லியம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஹர்சினி சுவேதா ஆகியோர் முதல் 3 இடங்களைப் பெற்று பரிசுகளை தட்டிச் சென்றனர்.
விழாவில், வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மேரி, தூத்துக்குடி மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட மக்கள் தொடர்பு அலுவலர் கள்ளாண்ட பெருமாள், சில்லாங்குளம் முத்துக்கருப்பன் மேல்நிலைப்பள்ளி உடற்பயிற்சி ஆசிரியர்கள் மாரிமுத்து, முத்துராஜ், வ.உ.சி விளையாட்டுக் கழக செயற்குழு தலைவர் சண்முகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை வ.உ.சி விளையாட்டுக் கழக இணை செயலாளர்கள் புகழும்பெருமாள், வேல்முருகன், கால்பந்து அணி தலைவர் முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் வாலிபர் கைது
புதன் 21, ஏப்ரல் 2021 10:46:59 AM (IST)

தொழில் அதிபரிடம் ரூ.18 லட்சம் மோசடி: எஸ்பியிடம் புகார்
புதன் 21, ஏப்ரல் 2021 8:51:51 AM (IST)

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த பெண் பரிதாப சாவு
புதன் 21, ஏப்ரல் 2021 8:44:16 AM (IST)

சாத்தான்குளம் வழக்கு ஆவணங்களை கேட்டு சப்-இன்ஸ்பெக்டர் மனு
புதன் 21, ஏப்ரல் 2021 8:34:51 AM (IST)

மண் திருட்டில் ஈடுபட்டவர் கைது: மினி லாரி பறிமுதல்
புதன் 21, ஏப்ரல் 2021 8:30:46 AM (IST)

குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு : பொதுமக்கள் திடீர் போராட்டம்
புதன் 21, ஏப்ரல் 2021 8:28:25 AM (IST)
