» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
ஞாயிறு 24, ஜனவரி 2021 9:09:07 AM (IST)
கயத்தாறு அருகே கருப்புகட்டி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள அய்யனார் ஊத்து கிராமம் கிணற்று தெருவை சேர்ந்த கிருஷ்ணன் என்பவருடைய மகன் மொட்டைய சாமி (39). கருப்புகட்டி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு சீதாலட்சுமி (30) என்ற மனைவியும், விஜயபாலன் (12) என்ற மகனும், கார்த்திகா (6) என்ற மகளும் உள்ளனர்.
மொட்டையசாமிக்கு உடலில் வெள்ளை தேமல் நோயால் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்பு அடைந்த அவர், நேற்று மதியம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும் கயத்தாறு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். மொட்டையசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் அரிக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெண் போலீசாருக்கான மகளிர் தின விழா போட்டிகள்
செவ்வாய் 9, மார்ச் 2021 3:57:18 PM (IST)

பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை: தூத்துக்குடி மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
செவ்வாய் 9, மார்ச் 2021 3:16:53 PM (IST)

காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 9, மார்ச் 2021 12:50:25 PM (IST)

தூத்துக்குடியில் அரசியல் தலைவர்களின் சிலைகள் துணியால் மூடல்!!
செவ்வாய் 9, மார்ச் 2021 12:36:34 PM (IST)

தூத்துக்குடியில் 2 இளம்பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை
செவ்வாய் 9, மார்ச் 2021 12:26:10 PM (IST)

கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
செவ்வாய் 9, மார்ச் 2021 12:08:39 PM (IST)
