» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தலுக்கு முன் அதிமுக - அமமுக இணையுமா? தூத்துக்குடியில் பரபரப்பு போஸ்டர்!!
வெள்ளி 22, ஜனவரி 2021 5:10:30 PM (IST)

அதிமுக - அமமுக இணைய வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பின்னர் அதிமுகவில் ஏற்பட்ட கட்சி உட்பூசல்களால் கட்சி இரண்டாக பிரிந்து அமமுக உருவானது. தற்போது அதிமுக ஆட்சி செய்து வந்தாலும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா விடுதலையாகி வந்தால் இரு கட்சிகளும் இணையும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. வருகிற 27ம் தேதி ஜெயலலிதா மணி மண்டபம் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடியில் அதிமுக - அமமுக இணைய வேண்டும் என அதிமுகவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் செங்குட்டுவன் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
அந்த போஸ்டரில் "சசிகலாவை பீனிக்ஸ் பறவை போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும், அதில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோரின் படங்களும் இணைந்த கைகள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அவர் நமது செய்தியாளரிடம் கூறும்போது, "எம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுக ஜெ. அணி - ஜா. அணி என்று பிரிந்து பின்னர் இணைந்தது. அதுபோல் தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள இந்த பிரிவு தற்காலிகமானது. அமமுக - அதிமுக இணைந்து வரவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டு இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற வேண்டும்" என்றார். தூத்துக்குடியில் நகரின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் அமமுக- அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருமணம் செய்வதாக ஏமாற்றி இளம்பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை
செவ்வாய் 9, மார்ச் 2021 3:16:53 PM (IST)

காவல் துறையினருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி : ஆட்சியர் துவக்கி வைத்தார்!!
செவ்வாய் 9, மார்ச் 2021 12:50:25 PM (IST)

தூத்துக்குடியில் அரசியல் தலைவர்களின் சிலைகள் துணியால் மூடல்!!
செவ்வாய் 9, மார்ச் 2021 12:36:34 PM (IST)

தூத்துக்குடியில் 2 இளம்பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணை
செவ்வாய் 9, மார்ச் 2021 12:26:10 PM (IST)

கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
செவ்வாய் 9, மார்ச் 2021 12:08:39 PM (IST)

தேவேந்திரகுல வேளாளர் அரசாணைக்கு எதிர்ப்பு: தேர்தலை புறக்கணிக்க வாதிரியார் சமூகத்தினர் முடிவு
செவ்வாய் 9, மார்ச் 2021 11:55:58 AM (IST)
