» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பைக் விபத்தில் வாலிபர் பரிதாப சாவு: நண்பர் படுகாயம்
செவ்வாய் 12, ஜனவரி 2021 12:32:41 PM (IST)
கோவில்பட்டி அருகே வேகத் தடையில் பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானதில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள துறையூர் மேற்கு தெருவைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் பழனிசாமி (34), அதே ஊர் வடக்குத் தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் ஜெயராம் (37) இவர்கள் இருவரும் நண்பர்கள் நேற்று இருவரும் ஒரே மோட்டார் பைக்கில் கோவில்பட்டி சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பசுவந்தனை சாலையில் வந்தபோது அங்கிருந்த வேகத்தடையில் பைக் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த பழனிசாமி கீழே விழுந்தார். அப்போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இவ்விபத்தில் படுகாயம் அடைந்த ஜெயராம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கொப்பம்பட்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!
திங்கள் 18, ஜனவரி 2021 3:59:45 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 18, ஜனவரி 2021 3:46:56 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் நாளை ஆஜர்?
திங்கள் 18, ஜனவரி 2021 3:30:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லா நிலையை உருவாக்க வேண்டும் : ஆட்சியர்
திங்கள் 18, ஜனவரி 2021 3:09:24 PM (IST)

ஜன.21-ல் கனிமொழி எம்பியின் பிரசார பயணம் ரத்து
திங்கள் 18, ஜனவரி 2021 12:31:45 PM (IST)
