» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் பலத்த மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு: 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
செவ்வாய் 12, ஜனவரி 2021 8:51:31 AM (IST)
தூத்துக்குடியில் பலத்த பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே, திருச்செந்தூர் ரோடு, தபால் தந்தி காலனி, தூத்துக்குடி அரசு மருத்துவமனை, குரூஸ் பர்னாந்து சிலை பகுதி, டபிள்யூ.ஜி.சி. ரோடு, டூவிபுரம் மெயின்ரோடு அண்ணாநகர் 1-வது தெரு, அரசு ஊழியர் குடியிருப்பு, போல்டன்புரம், ராமசாமி புரம், முதன்மைக்கல்வி அலுவலகம், தாலுகா அலுவலகம் பகுதி, அந்தோணியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஜார்ஜ் ரோடு, மறக்குடி தெரு, முத்தையாபுரம், சூசைநகர், அத்திமரப்பட்டி, பிரையன்ட் நகர் 3, 4 மற்றும் 5-வது தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால்100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு முடக்கி போட்டு உள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகை காலமாக உள்ள நிலையில் லாரிகளில் கொண்டு வரப்பட்டு உள்ள கரும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த மழை பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி பழைய மாநகராட்சி அருகே, திருச்செந்தூர் ரோடு, தபால் தந்தி காலனி, தூத்துக்குடி அரசு மருத்துவமனை, குரூஸ் பர்னாந்து சிலை பகுதி, டபிள்யூ.ஜி.சி. ரோடு, டூவிபுரம் மெயின்ரோடு அண்ணாநகர் 1-வது தெரு, அரசு ஊழியர் குடியிருப்பு, போல்டன்புரம், ராமசாமி புரம், முதன்மைக்கல்வி அலுவலகம், தாலுகா அலுவலகம் பகுதி, அந்தோணியார் கோயில் தெரு, சண்முகபுரம், ஜார்ஜ் ரோடு, மறக்குடி தெரு, முத்தையாபுரம், சூசைநகர், அத்திமரப்பட்டி, பிரையன்ட் நகர் 3, 4 மற்றும் 5-வது தெருக்கள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால்100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழை பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்களின் இயல்பு வாழ்க்கையை அடியோடு முடக்கி போட்டு உள்ளது. குறிப்பாக பொங்கல் பண்டிகை காலமாக உள்ள நிலையில் லாரிகளில் கொண்டு வரப்பட்டு உள்ள கரும்புகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. இந்த மழை பொது மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உள்ளது.
மக்கள் கருத்து
DevabalanJan 12, 2021 - 11:32:37 AM | Posted IP 162.1*****
dear sir,
Already our area (Annai Theresa Nagar) is flooded with rain water, now the present rain fall made the situation worst than before. Right from 2015 after the flood, we are asking for common drainage to connect Buckle canal. Nothing happened so far. Request the Govt. officials to look into the matter and execute so as to solve the ongoing problem permanently without further delay. Every year during rainy season we are suffering.
thanks and regards
Devabalan
மேலும் தொடரும் செய்திகள்

மீன்வளக்கல்லூரியில் மீன் தீவனம் தயாரிப்பு பயிற்சி : ஜனவரி21, 22 ஆகிய நாட்களில் நடக்கிறது
திங்கள் 18, ஜனவரி 2021 8:16:09 PM (IST)

மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கனிமொழி எம்பி பார்வையிட்டார்!
திங்கள் 18, ஜனவரி 2021 3:59:45 PM (IST)

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 19 பேருக்கு எஸ்பி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திங்கள் 18, ஜனவரி 2021 3:46:56 PM (IST)

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ரஜினிகாந்த் நாளை ஆஜர்?
திங்கள் 18, ஜனவரி 2021 3:30:55 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் விபத்துகள் இல்லா நிலையை உருவாக்க வேண்டும் : ஆட்சியர்
திங்கள் 18, ஜனவரி 2021 3:09:24 PM (IST)

ஜன.21-ல் கனிமொழி எம்பியின் பிரசார பயணம் ரத்து
திங்கள் 18, ஜனவரி 2021 12:31:45 PM (IST)

தூத்துக்குடி ஏரியா காரன்Jan 12, 2021 - 01:38:49 PM | Posted IP 162.1*****