» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கால்நடை மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை: ஆவின் தலைவர் என். சின்னத்துரை வழங்கினார்.
வியாழன் 6, டிசம்பர் 2018 3:49:48 PM (IST)

கால்நடை மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திட்டத்தின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கால்நடை மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணைகளை ஆவின் தலைவர் என். சின்னத்துரை வழங்கினார்.
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்ட பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் நலன் கருதி கால்நடை மருத்துவப் பணிகளை ஆவின் தலைவர் என். சின்னத்துரை சென்ற மாதம் ஆய்வு செய்து கால்நடை மருத்துவப்பணிகள் முழு வீச்சில் நடைபெற அறிவுறுத்தினார். அதன் தொடர்ச்சியாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் 2018-19-ன் உள் திட்டமான தொழுவத்திலேயே கால்நடை மருத்துவம் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு திட்டத்தின் கீழ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 10 கால்நடை மருத்துவர்களுக்கு இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
மேற்கண்ட கால்நடை மருத்துவர்கள் திருநெல்வேலி, வள்ளியூர், நான்குனேரி, ஆலங்குளம், சங்கரன்கோவில், சாத்தான்குளம், சொக்காரக்குடி, கயத்தார் மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவ்வொன்றிய கட்டுப்பாட்டில் உள்ள 342 பால் கூட்டுறவு சங்கங்களுக்கும் கால்நடை மருத்துவப் பணிகள் தொய்வின்றி நடைபெற போதுமான மருத்துகள் மற்றும் மருத்துவ உபகாரணங்கள் வழங்கி இப்பணிகள் சிறப்பாக நடைபெற தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பணி நியமனம் செய்யப்பட்டுள்ள கால்நடை மருத்துவர்கள் மூலம் பால் உற்பத்தியாளர்களின் இல்லங்களுக்குச் சென்று கால்நடை மருத்துவ சிகிச்சைகள், செயற்கை முறை கருவூட்டல் பணிகள் மற்றும் அவசர சிகிச்சை பணிகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் கால்நடை வளர்ப்பு மேலாண்மை பயிற்சி, தூய பால் உற்பத்தி பயிற்சி, சமச்சீர் தீவனத்திட்டம் மற்றும் பல்வேறு தீவனப்பயிர்களான அசோலா, மண்ணில்லா பசுந்தீவனம் வளர்ப்பு முறைகள், கால்நடை வளர்ப்பில் தாதுஉப்பின் முக்கியத்துவம், கலப்புத்தீவனம் வழங்கும் முறைகள் பற்றியும் பல்வேறு ஆலோசனைகளை இம் மருத்துவர்கள் வழங்குவார்கள். மேலும் சங்கப்பணியாளர்களுக்கு செயற்கை முறை கருவூட்டல் பயிற்சி வழங்கி சரியான நேரத்தில் செயற்கை முறை கரூவூட்டல் செய்யவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இவ்வொன்றிய பால் உற்பத்தி 72,000 லிட்டரிலிருந்து ஒரு இலட்சம் லிட்டராக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஆவின் தலைவர் என். சின்னத்துரை தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி அருகே பள்ளி மாணவி தற்கொலை
புதன் 20, பிப்ரவரி 2019 7:44:09 PM (IST)

சண்முகநாதன் எம்எல்ஏ.,வுடன் ஸ்டெர்லைட்எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் சந்திப்பு
புதன் 20, பிப்ரவரி 2019 7:21:33 PM (IST)

தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்
புதன் 20, பிப்ரவரி 2019 6:45:22 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 22ம் தேதி அம்மா திட்ட முகாம்
புதன் 20, பிப்ரவரி 2019 5:59:11 PM (IST)

சீர்மரபினர் சமுதாயத்தினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் கோரி்க்கை
புதன் 20, பிப்ரவரி 2019 5:04:18 PM (IST)

தூத்துக்குடியில் பிளஸ் 2 மாணவியை கடத்திய வாலிபர் போக்ஸோ சட்டத்தில் கைது
புதன் 20, பிப்ரவரி 2019 4:11:36 PM (IST)
