» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு நூலகம் புரவலர் சேர்க்கையில் மாவட்டத்தில் முதலிடம்
சனி 16, டிசம்பர் 2017 8:08:38 PM (IST)

வேப்பலோடை அரசு கிளை நூலகம் புரவலர் சேர்க்கையில் மாவட்டத்தில் முதல் இடம் பெற்று சாதித்துள்ளது.
வேப்பலோடையில் நடைபெற்ற நூலக விழாவிற்கு சென்னை உயர்நீதி்மன்ற வழக்கறிஞர் நெல்சன் கோயில்தாஸ் தலைமை தாங்கினார்.அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்கத் தலைவர் முனியசாமி,ஆசிரியர் கண்ணையா, சின்னத்துரை, ஆசிரியர் மணி,பீட்டர்,வைப்பார் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செண்பகப்பெருமாள்,குளத்தூர முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சின்னச்சாமி,செல்வம்,நூலகர் சிவகுமார்,பொழிச்சலூர் வியாபாரி கள் சங்கத்தலைவர் கோமஸ் முன்னிலை வகித்தனர்.
ஆசிரியர் துரையரசு வரவேற்புரை ஆற்றினார்.ஆசிரியர்கள் ஜெபராஜ், செல்வக்குமார், சரவணன் வாழ்த்துரை வழங்கினர்.அன்னை தெரசா கிராம பொதுநலச்சங்க செயலர் ஜேம்ஸ் அமிர்தராஜ் நூலக செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட நூலக அலுவலர் ராம்சங்கர்,வேப்பலோடை அரசு கிளை நூலகம் 373 புரவல்களை சேர்த்து மாவட்டத்தில் முதலிடம் பெற்றமைக்காக,அதற்கு காரணமான அன்னை தெரசா கிராம பொதுநலச் சங்கத்திற்கு நற்சான்று வழங்கி, சிறப்புரை ஆற்றினார்.முடிவில் சங்கப்பொருளாளர் முத்துக்கி ருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பாஜக,அதிமுக கட்சிகள் இணக்கம், அரசுகள் அல்ல : காங்.,தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
சனி 21, ஏப்ரல் 2018 8:48:25 PM (IST)

கடலில் தவறி விழுந்ததில் மீனவர் பரிதாப சாவு
சனி 21, ஏப்ரல் 2018 6:24:42 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரூ.5451 கோடி கடன் இலக்கு நிர்ணயம் : வருடாந்திர திட்ட அறிக்கை வெளியீடு
சனி 21, ஏப்ரல் 2018 4:05:32 PM (IST)

அங்கன்வாடியில் குழந்தைகளை பேணிகாத்து வளர்க்க வேண்டும்: மாவட்ட வருவாய் அலுவலர் பேச்சு!!
சனி 21, ஏப்ரல் 2018 3:49:07 PM (IST)

திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்கத் தடை : தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார்!!
சனி 21, ஏப்ரல் 2018 3:41:33 PM (IST)

தூத்துக்குடியில் 23ம் தேதி மனித சங்கிலி போராட்டம் : கீதாஜீவன் எம்எல்ஏ அறிவிப்பு
சனி 21, ஏப்ரல் 2018 12:56:36 PM (IST)
