» செய்திகள் - விளையாட்டு » உலகம்
வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி
புதன் 31, மே 2023 4:38:14 PM (IST)

வட கொரியா நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான பதட்டங்கள் அதிகரித்து வருவதால், தனது இராணுவ திறன்களை அதிகரிக்க முதல் உளவு செயற்கைக்கோளை ஏற்றிச் சென்ற ராக்கெட் கொரிய தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் அதன் முதல் மற்றும் இரண்டாவது கட்டங்களை பிரித்ததைத் தொடர்ந்து, உந்துதலை இழந்த காரணத்தால், நடுவானில் வெடித்து கடலில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோல்விக்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருவதாகவும் அது கூறியுள்ளது. வட கொரியாவின் முக்கிய விண்வெளி ஏவுதளம் அமைந்துள்ள வடமேற்கு டோங்சாங்-ரி பகுதியில் இருந்து காலை 6:30 மணியளவில் ராக்கெட் ஏவப்பட்டது. இதனால், தென் கொரியா மற்றும் ஜப்பானின் சில பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேற்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், எந்த ஆபத்தும் அல்லது சேதமும் ஏற்படாததால் எச்சரிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வடகொரியாவின் அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம்: கிம்
வெள்ளி 29, செப்டம்பர் 2023 1:42:02 PM (IST)

காணாமல் போன பூமியின் 8-வது கண்டம்: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவல்!
வியாழன் 28, செப்டம்பர் 2023 5:21:48 PM (IST)

ஈராக்கில் திருமண விழாவில் பயங்கர தீ விபத்து: மணமக்கள் உள்பட 120 பேர் பலி!
வியாழன் 28, செப்டம்பர் 2023 11:44:18 AM (IST)

பாகிஸ்தானில் ஒரேநாளில் 159 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு !
வியாழன் 28, செப்டம்பர் 2023 11:41:26 AM (IST)

ஹர்தீப் கொலை பற்றி என்னிடம் கேள்வி கேட்பது பொருத்தமற்றது: வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
புதன் 27, செப்டம்பர் 2023 9:55:47 AM (IST)

ராட்டினத்தில் 75 அடி உயரத்தில் தலைகீழாக தொங்கிய மக்கள்: கனடாவில் பரபரப்பு !
செவ்வாய் 26, செப்டம்பர் 2023 5:20:02 PM (IST)
