» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கை தமிழர்களுக்கு தலா ரூ.28 லட்சத்தில் 4,000 வீடுகள் கட்டித் தர இந்திய அரசு ஒப்பந்தம்!
வியாழன் 16, மார்ச் 2023 11:23:16 AM (IST)
இலங்கை தமிழர்களுக்கு தலா ரூ.28 லட்சத்தில் 4,000 வீடுகள் கட்டித் தர அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
இது பிரதமர் மோடியின் மைல்கல் நடவடிக்கை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய மலையகத் தமிழர்களின் வாழ்வாதாரம் முன்னேற, தலா ரூ.28 லட்சம் மதிப்பில் 4,000 வீடுகள் கட்டித் தருவதற்கான ஒப்பந்தம் இரு நாட்டு அரசுகள் இடையே கையெழுத்தாகியுள்ளது.
இந்தியாவின் நாகரிக இரட்டை நாடான இலங்கையில் வசிக்கும் தமிழ் மக்களின் முன்னேற்றத்துக்காக பிரதமர் நரேந்திர மோடி தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நலத்திட்டப் பணிகளில் இது ஒரு மைல்கல் என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது: பாகிஸ்தான், ரஷியா இரங்கல்!
சனி 3, ஜூன் 2023 4:51:02 PM (IST)

பாகிஸ்தான் சிறையிலிருந்து 200 இந்திய மீனவர்கள் விடுதலை: மனிதாபிமான நடவடிக்கை!
சனி 3, ஜூன் 2023 12:38:25 PM (IST)

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நலமாக இருக்கிறார்: வெள்ளை மாளிகை
சனி 3, ஜூன் 2023 8:08:29 AM (IST)

சவுதி அரேபிய கட்டடக் கலைஞரை கரம்பிடித்தார் ஜோர்டன் பட்டத்து இளவரசர்!
வெள்ளி 2, ஜூன் 2023 11:33:45 AM (IST)

இந்தியா-நேபாளம் இடையே சரக்கு போக்குவரத்து ரயில் தொடங்கியது!
வியாழன் 1, ஜூன் 2023 4:40:58 PM (IST)

வட கொரியாவின் முதல் உளவு செயற்கைக்கோள் சோதனை தோல்வி
புதன் 31, மே 2023 4:38:14 PM (IST)
