» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் துபாய் மருத்துவமனையில் காலமானார்

ஞாயிறு 5, பிப்ரவரி 2023 6:32:30 PM (IST)

துபாய் மருத்துவமனையில் நீண்ட நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப்  சிகிச்சை பலனின்றி காலமானார். 

மார்ச் 2016 முதல் துபையில் அமிலாய்டோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டார், இது உடல் முழுவதும் உள்ள உறுப்புகள் மற்றும் திசுக்களில் அமிலாய்டு எனப்படும் அசாதாரண புரதத்தின் கட்டமைப்பால் ஏற்படும் அரிய நோய்க்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிவினைக்கு முன் ஆகஸ்ட் 11, 1943 இல் இந்தியாவின் தில்லியில் பிறந்த பர்வீஸ் முஷாரஃப். பிரிவினைக்குப் பிறகு முஷாரஃப் குடும்பம்  1947 இல் புது தில்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு குடிபெயர்ந்தது. அவர் 1964 இல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்தார் மற்றும் குவெட்டாவில் உள்ள ராணுவப் பணியாளர்கள் மற்றும் கட்டளைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவ தளபதியாக முஷாரஃப் இருந்தார்.  இவர் ராணுவப் புரட்சியின் மூலம் நவாஸ் ஷெரீப் ஆட்சியை கலைத்து  1999-ல் அதிகாரத்தை கைப்பற்றினார். 2001 முதல் 2008 வரை பாகிஸ்தான் அதிபராக இருந்த முஷாரஃப், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் ரெட் மசூதி மதகுரு கொலை வழக்கில் தப்பியோடியவராக அறிவிக்கப்பட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory