» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மொராக்கோவுக்கு எதிராக தோல்வி: பெல்ஜியத்தில் கால்பந்து ரசிகர்கள் வன்முறை
திங்கள் 28, நவம்பர் 2022 12:02:28 PM (IST)

உலக கோப்பை போட்டியில் தோல்வி எதிரொலியாக பெல்ஜியத்தின் கால்பந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
கத்தாரில் நடைபெற்று வரும் 2022 உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் எப் பிரிவில் நேற்று பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி மொராக்கோவை எதிர்க்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தி மொராக்கோ அபார வெற்றிபெற்றது. பெல்ஜியத்தின் தோல்வி கால்பந்து ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மொராக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் ஆத்திரமடைந்த பெல்ஜியத்தில் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பெல்ஜியம் தலைநகர் பிரெசில்சில் கால்பந்து ரசிகர்கள் மொரோக்கோ கொடியை தீவைத்து கொழுத்தினர். மேலும், கார்கள், பைக்குகளுக்கு தீ வைத்தும் ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வன்முறையில் ஈடுபட்ட ரசிகர்களை கைது செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோடிகளில் போனஸ் கொடுத்த சீன நிறுவனம் ஊழியர்கள் இன்ப அதிர்ச்சி..!
புதன் 1, பிப்ரவரி 2023 12:31:13 PM (IST)

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா தயக்கம்
செவ்வாய் 31, ஜனவரி 2023 5:18:53 PM (IST)

பாக்.மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 83பேர் உயிரிழப்பு - 150பேர் படுகாயம்!
செவ்வாய் 31, ஜனவரி 2023 4:03:22 PM (IST)

ஒரே ஒரு ராக்கெட்டை ஏவினால் போதும்: போரிஸ் ஜான்சனை மிரட்டிய புதின்!
திங்கள் 30, ஜனவரி 2023 4:51:49 PM (IST)

ரஷியாவின் தொடர் தாக்குதலை முறியடிக்க புதிய ஆயுதங்கள் தேவை: உக்ரைன் அதிபர்
திங்கள் 30, ஜனவரி 2023 11:53:35 AM (IST)

அமெரிக்க விமானப்படையில் இந்திய வம்சாவளி விண்வெளி வீரருக்கு முக்கிய பதவி
சனி 28, ஜனவரி 2023 4:51:59 PM (IST)
