» செய்திகள் - விளையாட்டு » உலகம்
சீனாவில் மின்னல் வேகத்தில் கரோனா பரவல்: ஒரே நாளில் 32,943 பேருக்கு தொற்று உறுதி!
வெள்ளி 25, நவம்பர் 2022 11:50:04 AM (IST)
சீனாவில் ரேரே நாளில் 32 ஆயிரத்து 943-க்கும் மேற்பட்டோருக்கு இந்த தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கரோனா வைரஸ் தொற்று, உலக நாடுகளையெல்லாம் பாதித்தது. நேற்று முன்தின நிலவரப்படி உலகமெங்கும் 63 கோடியே 95 லட்சத்து 78 ஆயிரத்து 239 பேரை கரோனா பாதித்துள்ளது. இந்தத் தொற்றால் 66 லட்சத்து 25 ஆயிரத்து 979 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் அதிகபட்சமாக 9 கோடியே 85 லட்சத்து 3 ஆயிரத்து 462 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 10 லட்சத்து 78 ஆயிரத்து 929 பேர் இறந்தனர்.
இப்படி உலகை உலுக்கிய கரோனாவை இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. ஆனால் சீனாவில்தான் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. அங்கு பல நகரங்களில் பொதுமுடக்கம் இருந்தாலும் தொற்று அவ்வப்போது எழுச்சி பெற்று வருகிறது.
அந்த வகையில் ந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது.புதிதாக 32,943 பேருக்கு தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. இதில் 3,103 பேருக்கு அறிகுறிகள் உள்ளன. 29,840 பேருக்கு எந்தவித கரோனா அறிகுறிகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறப்புகள் எதுவும் இல்லை. சீனாவில் கரோனா பாதிப்பு தற்போது அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பூகம்பத்தால் உருக்குலைந்து கிடக்கும் துருக்கி: வீடு, குடும்பத்தை இழந்து தவிக்கும் மக்கள்
புதன் 8, பிப்ரவரி 2023 5:11:04 PM (IST)

இந்தியா முன்னேறுகிறது; பாகிஸ்தானின் எதிர்காலம் கேள்விக்குறி : இம்ரான் கான்
புதன் 8, பிப்ரவரி 2023 4:36:21 PM (IST)

2ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போயிங் விமான நிறுவனம் முடிவு!
புதன் 8, பிப்ரவரி 2023 10:50:35 AM (IST)

துருக்கி விரைந்தது இந்திய மனிதாபிமான குழு: முதல் தவணை நிவாரணம் வழங்கல்!
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 3:54:11 PM (IST)

அமெரிக்க பாடகிக்கு 4 கிராமி விருதுகள்: இதுவரை 32 விருதுகளை வென்று சாதனை
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 12:42:09 PM (IST)

துருக்கியில் சக்தி வாய்ந்த பூகம்பத்தில் 1,300 பேர் உயிரிழப்பு : பிரதமர் மோடி இரங்கல்
திங்கள் 6, பிப்ரவரி 2023 3:17:08 PM (IST)
