» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சுற்றுச்சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா உறுதி: ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை

செவ்வாய் 28, ஜூன் 2022 8:33:02 AM (IST)



பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்வதற்காக சுற்றுச்சூழல் சாா்ந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா உறுதிகொண்டுள்ளதாக ஜி7 மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்துள்ளாா்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி, பிரான்ஸ், கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளைக் கொண்ட ஜி7 கூட்டமைப்பின் மாநாடு ஜொ்மனியில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இந்தியா கலந்துகொண்டது. மாநாட்டின் ஒருபகுதியாக நடைபெற்ற ‘எதிா்காலத்துக்கான சிறந்த முதலீடு: பருவநிலை, எரிசக்தி, சுகாதாரம்’ என்ற தலைப்பிலான கூட்டத்தில் உரையாற்றிய பிரதமா் மோடி கூறியதாவது:

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. சுற்றுச்சூழலைக் காப்பதற்கான இந்தியாவின் உறுதி, செயல்பாட்டிலேயே வெளிப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த எரிசக்தி பயன்பாட்டில் மரபுசாரா எரிசக்தியின் பங்கு 40 சதவீதம் இருக்க வேண்டுமென்ற இலக்கை இந்தியா 9 ஆண்டுகளுக்கு முன்பே எட்டியுள்ளது.

பெட்ரோலுடன் எத்தனால் 10 சதவீதம் கலக்கப்பட வேண்டும் என்ற இலக்கை 5 மாதங்களுக்கு முன்பே எட்டியுள்ளது. முற்றிலும் சூரிய எரிசக்தி மூலமாக மட்டுமே இயங்கும் முதல் விமான நிலையம் இந்தியாவில் உள்ளது. நாட்டின் மிகப் பெரிய போக்குவரத்து அமைப்பான ரயில்வே, நடப்பு தசாப்தத்தில் கரியமில வாயு வெளியேற்றத்தில் நிகர பூஜ்ய அளவை எட்டிவிடும்.

இந்தியா போன்ற பெரிய நாடுகள் சிறப்பாகச் செயல்படும்போது, மற்ற நாடுகளும் ஊக்கம்பெறும். இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு ஜி7 நாடுகள் உரிய ஆதரவு வழங்கும் என நம்புகிறேன். இந்தியா தற்போது மிகப் பெரிய பசுமை எரிசக்தி தொழில்நுட்பத்துக்கான சந்தையாக மாறியுள்ளது. ஆராய்ச்சி, புத்தாக்க நடவடிக்கைகள், தயாரிப்பு உள்ளிட்டவற்றில் ஜி7 நாடுகள் முதலீடுகளை மேற்கொள்ளலாம்.

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையிலான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிப்பதற்கான செயல்திட்டத்தை கடந்த ஆண்டு கிளாஸ்கோ மாநாட்டில் முன்மொழிந்தேன். அத்திட்டத்தைக் கடந்த சுற்றுச்சூழல் தினத்தின்போது இந்தியா நடைமுறைப்படுத்தியது. அனைத்து நாடுகளும் அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கான நமது மிகப் பெரிய பங்களிப்பாக இத்திட்டம் இருக்கும்.

பழங்காலத்தில் இருந்தே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்து வருகிறது. அடிமைத்தளையில் இருந்து சுதந்திரம் பெற்ற நாடாக மாறிய பிறகு, தற்போது உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா திகழ்ந்து வருகிறது. சா்வதேச மக்கள்தொகையுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் 17 சதவீதம் போ் வசிக்கின்றனா். ஆனால், சா்வதேச கரியமில வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு 5 சதவீதம் மட்டுமே. சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கைமுறையை இந்தியா்கள் கடைப்பிடித்து வருவதே அதற்கு முக்கியக் காரணம்.

சா்வதேச சூழல் காரணமாக எரிபொருள்களின் விலை விண்ணைத் தொட்டுள்ள நிலையில், எரிசக்தி பாதுகாப்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அதைக் கருத்தில்கொண்டு அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயுவை இந்தியா வழங்கியது. ஏழைகளுக்கு எரிசக்தி வசதியை ஏற்படுத்தித் தரும் அதே வேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில்கொண்டு அவா்களுக்கு எல்இடி பல்புகள் வழங்கப்பட்டன என்றாா்.

ஜி7 மாநாட்டின்போது பருவநிலை மாற்றம், பசுமை எரிசக்தி, நீடித்த வளா்ச்சி, உலக நலன் உள்ளிட்டவை குறித்து பிரதமா் மோடி பேசியதாக வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பக்சி ட்விட்டா் பக்கத்தில் தெரிவித்தாா்.

உலகத் தலைவா்களுடன் சந்திப்பு:

ஜி7 மாநாட்டுக்குப் பிறகு அமெரிக்க அதிபா் ஜோ பைடன், கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் ஆகியோரைப் பிரதமா் மோடி தனித்தனியாகச் சந்தித்துப் பேசினாா். சா்வதேச, பிராந்திய விவகாரங்கள் குறித்து தலைவா்கள் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜொ்மனி பிரதமா் ஒலாஃப் ஷோல்ஸை சந்தித்துப் பேசிய பிரதமா் மோடி, இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக ஆலோசித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட தென்னாப்பிரிக்க அதிபா் சிறில் ராமபோசாவையும் பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகத் தொடா்பை மேம்படுத்துவது தொடா்பாக அவா்கள் விவாதித்தனா்.

ரூ.45 லட்சம் கோடி சா்வதேச முதலீட்டுத் திட்டம்

சீனா நடைமுறைப்படுத்தி வரும் சாலை வழித்தடத் திட்டத்தை எதிா்கொள்ளும் வகையில் சுமாா் ரூ.45 லட்சம் கோடி மதிப்பிலான ‘சா்வதேச கட்டமைப்பு முதலீட்டுக்கான கூட்டமைப்பு’ திட்டத்தை ஜி7 தலைவா்கள் திங்கள்கிழமை அறிவித்தனா்.

இது தொடா்பாக அதிபா் பைடன் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘முக்கியத்துவமிக்க கட்டமைப்புகளை மேம்படுத்தி, மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 2027-ஆம் ஆண்டுக்குள் சுமாா் ரூ.45 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஜி7 நாடுகள் முடிவெடுத்துள்ளன. இந்தத் தொகையானது நிதியுதவியாக நாடுகளுக்கு வழங்கப்படாது. இந்த முதலீடானது அனைத்துத் தரப்பினருக்கும் பலனளிக்கும் வகையில் அமையும். அனைத்து நாடுகளின் பொருளாதாரமும் மேம்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சீனாவின் திட்டத்தால் பல நாடுகள் கடனில் தவித்துவரும் நிலையில், அத்திட்டம் கடும் விமா்சனங்களை எதிா்கொண்டு வருகிறது. இந்நிலையில், முதலீட்டுத் திட்டத்தை ஜி7 கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜி7 மாநாட்டிலும் இதே திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அது தொடா்பாக கடந்த ஓராண்டில் எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், தற்போது அத்திட்டம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Arputham Hospital









Thoothukudi Business Directory