» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசியை இறக்குமதி செய்ய பிரேசில் அனுமதி
வெள்ளி 25, ஜூன் 2021 5:42:29 PM (IST)
இந்தியாவின் பாரத் பயோடெக் தயாரித்துள்ள 40 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது.
உலக சுகாதாரத்துறையின் ஒப்புதல் பெறப்படாத இந்நிலையில் பிரேசில் அரசு 40 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆணை வழங்கியிருப்பது குறிப்பிடத்தகுந்தது. முதலில் வாங்கப்படும் 40 லட்சம் தடுப்பூசிகளை பிரேசில் மக்களுக்கு வழங்குவோம். இந்தியப் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட பிரேசில் நாட்டு மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் இந்த விவரங்கள் பதிவு செய்யப்படும். 40 லட்சம் தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்திய பிறகு புள்ளி விவரங்களை நாங்கள் ஆய்வு செய்வோம் அதனடிப்படையில் அடுத்து எவ்வளவு தடுப்பூசிகளை வாங்குவது என்று முடிவு செய்வோம் என பிரேசில் சுகாதார ஒழுங்குமுறை முகமை அறிவித்துள்ளது.
முதலில் இந்தியா தயாரித்துள்ள தடுப்பூசி மருந்தாகிய கோவாக்சினை இறக்குமதி செய்ய பிரேசில் அரசு மறுத்துவிட்டது .பிரேசில் அரசுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் விரிவான விளக்கங்களை வழங்கியுள்ளது. இப்பொழுது 3வது கட்ட சோதனை முடிவுகள் வெளியாகி இருப்பதால் இந்திய தடுப்பூசி மருந்து இறக்குமதி செய்ய பிரேசில் அரசு முன்வந்துள்ளது. ரஷியா தயாரித்துள்ள தடுப்பூசி மருந்தாகிய ஸ்புட்னிக்கை இறக்குமதி செய்யவும் பிரேசில் அரசு முடிவு செய்துள்ளது.