» செய்திகள் - விளையாட்டு » உலகம்
இலங்கையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உள்ளாட்சி தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு!!
சனி 10, பிப்ரவரி 2018 11:48:17 AM (IST)

இலங்கையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இன்று உள்ளாட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இலங்கையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் இலங்கையில், இன்று நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 340 கவுன்சிலுக்கான உறுப்பினர்களை 1.5 கோடி வாக்காளர்கள் தேர்வு செய்கின்றனர். சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியும் (எஸ்.எல்.எஃப்.பி), ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் (யுஎன்பி) ஒன்றையொன்று எதிர்த்து, இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.
இவ்விரு கட்சிகளுக்கிடையே நிலவும் பிளவு, பாதுகாப்பற்ற உணர்வு, கசப்பு ஆகியவை அனல் பறக்கும் பிரச்சாரங்களில் வெளிப்படுகின்றன. எனவே, தேர்தல் முடிவு தேசிய கூட்டணி அரசில் தாக்கத்தை வெளிப்படுத்தும் என தெரிகிறது. மொத்தம் 24 நகராட்சி கவுன்சில், 41 ஊரக கவுன்சில், 275 பிரதேசிய சபாஸ் ஆகிய உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 8375 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அந்நாட்டு தேர்தல் ஆணைய அதிகாரி தெரிவித்தார்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு இலங்கை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மொத்தம் 65 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், முப்படையை சேர்ந்த 900 வீரர்களும் பாதுகாப்பு உதவிப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இலங்கை அதிபர் சிறிசேனாவின் கட்சிக்கு முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் கட்சி கடும் சவால் அளிக்கும் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இந்தியா தாக்கினால் தக்க பதிலடி கொடுங்கள்: பாக். ராணுவத்துக்கு இம்ரான்கான் உத்தரவு
வெள்ளி 22, பிப்ரவரி 2019 10:17:37 AM (IST)

புல்வாமாவில் தீவிரவாத தாக்குதல் நடத்தியவர்கள் மீது ஐநா நடவடிக்கை: சவுதி அமைச்சர் வலியுறுத்தல்
வியாழன் 21, பிப்ரவரி 2019 5:39:06 PM (IST)

புல்வாமா தாக்குதலை நடத்தியது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்புதான் : பர்வேஸ் முஷாரப்
வியாழன் 21, பிப்ரவரி 2019 4:21:41 PM (IST)

இந்தியாவும் பாகிஸ்தானும் ஒற்றுமையாக இருந்தால் நன்றாக இருக்கும் : டிரம்ப் அட்வைஸ்
புதன் 20, பிப்ரவரி 2019 11:31:58 AM (IST)

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)

அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:18:42 AM (IST)
