» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வியாழன் 3, ஏப்ரல் 2025 8:22:22 AM (IST)

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மாதமும் (தமிழ் மற்றும் மலையாளம்) முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறும். அதே போல் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவும் 10 நாட்கள் கொண்டாடப்படும். அதன்படி பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நேற்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி முன்னிலையில் தந்திரிகள் கண்டரரு ராஜீவரு, பிரம்ம தத்தன் ஆகியோர் காலை 9.30 மணிக்கு கொடியை ஏற்றி வைத்தனர். விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜைகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். வருகிற 10-ந் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டையும், 11-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டும் நடைபெறும்.
இதனை தொடர்ந்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறுகிறது. அதை தொடர்ந்து சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகை வருகிறது. இதனால் சபரிமலை கோவில் தொடர்ந்து 18-ந் தேதி வரை திறந்திருக்கும். விஷு பண்டிகை வருகிற 14-ந் தேதி கொண்டாடப்படுவதால் அன்று அதிகாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சிறப்பு பூஜை மற்றும் கனி காணும் சடங்கு நடைபெறும்.
பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை தந்திரி மற்றும் மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி ஆகியோர் வழங்குகிறார்கள். பங்குனி உத்திர ஆராட்டு விழா தொடங்கியதால் சபரிமலை, பம்பை மற்றும் நிலக்கல்லில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களின் நலன் கருதி திருவனந்தபுரம், செங்கன்னூர், பத்தனம்திட்டா, கோட்டயம் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரள அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எம்புரான் திரைப்படத் தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1½ கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை தகவல்!
ஞாயிறு 6, ஏப்ரல் 2025 9:16:37 AM (IST)

இந்திய தமிழர்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும்: பிரதமர் மோடி நம்பிக்கை
சனி 5, ஏப்ரல் 2025 5:32:43 PM (IST)

இயற்கை பேரிடர் பாதிப்பு: தமிழ்நாட்டுக்கு கூடுதலாக ரூ.522.34 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு
சனி 5, ஏப்ரல் 2025 5:13:53 PM (IST)

ஸ்ரீஹரிகோட்டாவில் ரூ. 3,984.86 கோடி செலவில் 3வது ஏவுதளம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வெள்ளி 4, ஏப்ரல் 2025 12:35:04 PM (IST)

பைக் டாக்ஸி சேவைக்கு தடை விதிக்க வேண்டும்: கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
வியாழன் 3, ஏப்ரல் 2025 11:37:00 AM (IST)

வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் : கிரண் ரிஜிஜு
புதன் 2, ஏப்ரல் 2025 3:28:20 PM (IST)
