» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

2047ல் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி பட்ஜெட் தயாரிப்பு: பிரதமர் மோடி பேட்டி

திங்கள் 22, ஜூலை 2024 11:53:37 AM (IST)

'2047ம் ஆண்டில் வளர்ந்த பாரதம்' என்ற இலக்கை அடையும் நோக்கில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அடுத்த மாதம் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. பாஜக 3வது முறையாக ஆட்சியமைத்த பின்னர் முதன்முறையாக தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதுவாகும்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது, "இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்கிறது. நாட்டின் வளர்ச்சிக்கான பாதையில் மத்திய அரசு தொடர்ந்து பயணிக்கும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன். இது முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடராக இருக்கும். 

எதிர்ப்பு அரசியலை எதிர்க்கட்சிகள் கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற வேண்டும். நாடாளுமன்ற கூட்டத் தொடரை சுமூகமாக நடத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இன்றைய பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுகளில் எங்கள் அரசு எந்த பாதையில் பயணிக்கிறது என்பதை முடிவு செய்யும். 2047ம் ஆண்டில் வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடையும் நோக்கில் இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடே எதிர்பார்க்கிறது என்றார்.


மக்கள் கருத்து

nermaiJul 23, 2024 - 02:01:08 PM | Posted IP 162.1*****

ALL FALSE

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

கேரளாவில் துணை ஆட்சியர் தற்கொலை!

செவ்வாய் 15, அக்டோபர் 2024 9:04:30 PM (IST)

Sponsored Ads



New Shape Tailors




Arputham Hospital



Thoothukudi Business Directory