» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வெடிகுண்டு வைத்திருப்பதாக பெண் பயணி மிரட்டல்: மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு!

வியாழன் 1, ஜூன் 2023 4:09:33 PM (IST)

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பெண் பயணி ஒருவர் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மும்பை சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கொல்கத்தாவுக்குச் செல்லும் பெண் பயணி ஒருவர் தான் கொண்டுவந்த பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்தும்படி அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து கூடுதல் கட்டணம் செலுத்த அந்தப் பெண் பயணி மறுத்துள்ளார். பின்னர், தான் கொண்டுவந்த பையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி அதிகாரிகளை மிரட்டியுள்ளார். 

அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் அவர் கொண்டுவந்த பைகளை சோதனை செய்தனர். ஆனால், அதில் சந்தேகத்திற்குரிய எந்தவித பொருளும் காணப்படவில்லை.பொருள்களுக்கு கூடுதல் கட்டணம் செலுத்துவதற்காக பெண் பயணி வெடிகுண்டு வைத்திருப்பதாக அங்குள்ளவர்களை பீதியடைய செய்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவத்திற்குப் பிறகு சஹார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பெண் பயணி கைது செய்யப்பட்டார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education





Thoothukudi Business Directory