» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத ஓராண்டு விலக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு
செவ்வாய் 7, பிப்ரவரி 2023 11:46:29 AM (IST)
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வை எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கு எதிராக விலக்கு கோரி தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு முன் நேற்று நடைபெற்றது. அப்போது, தமிழ்நாடு தவிர்த்து ஏனைய மாநிலங்களில் மும்மொழி கொள்கை அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இருமொழி கொள்கை அமலில் இருக்கிறது. இதனால் மொழிவாரி சிறுபான்மையினர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தமிழ்நாடு மொழிவாரி சிறுபான்மையினர் சங்கத்தின் சார்பில் வாதிடப்பட்டது.
2022-23 கல்வியாண்டில், மனுதாரர் பிரதிநிதித்துவப்படுத்தும் 863 மாணவர்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்க முடியும் என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுத மொழிவாரி சிறுபான்மையின மாணவர்களுக்கு மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹிந்துத்துவம் குறித்து சா்ச்சை கருத்து: கன்னட நடிகா் சேத்தன்குமாா் சிறையில் அடைப்பு!
புதன் 22, மார்ச் 2023 12:03:45 PM (IST)

இந்தியாவில் 110 யூடியூப் சேனல்களுக்கு தடை: மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை நடவடிக்கை!
புதன் 22, மார்ச் 2023 11:55:23 AM (IST)

மரண தண்டனையை நிறைவேற்ற மாற்று வழிகள்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை
புதன் 22, மார்ச் 2023 11:15:34 AM (IST)

ஆன்லைன் சூதாட்டங்களை தடுக்க மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது: அனுராஜ் சிங் தாக்கூர் விளக்கம்
செவ்வாய் 21, மார்ச் 2023 5:09:40 PM (IST)

மத்திய அரசைக் கண்டித்து 29-ந்தேதி போராட்டம்: மம்தா பானர்ஜி அறிவிப்பு
செவ்வாய் 21, மார்ச் 2023 3:16:01 PM (IST)

போலீசை அனுப்பி என்னை அச்சுறுத்த முடியாது: ராகுல்காந்தி
செவ்வாய் 21, மார்ச் 2023 10:21:18 AM (IST)
