» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடை நீட்டிப்பு: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

செவ்வாய் 29, நவம்பர் 2022 4:03:51 PM (IST)



அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தடையை  நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உத்தரவிட்டுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுக்கு தடைகோரி ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கின் விசாரணை ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறாது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு டிசம்பர் 6 ஆம் தேதி  விசாரிக்கப்படும் என்று  உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

டிசம்பர் 6 ஆம் தேதி விசாரிக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஏற்றுகொண்டுள்ளது. மேலும், டிசம்பர் 6 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது இருதரப்பு வாதங்களை கூற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த வழக்கை டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்குமாறு பன்னீர் செல்வம் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory