» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகாவில் கனரக வாகனம் கவிழ்ந்து விபத்து : 9 பேர் உயிரிழப்பு -10பேர் படுகாயம்!

திங்கள் 27, ஜூன் 2022 11:55:49 AM (IST)

கர்நாடகாவில் சிறிய பாலம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயமடைந்தனர்.

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கோகக் தாலுகா அக்கா தங்கேரஹல்லா கிராமத்தில் இருந்து கனரக வாகனம் ஒன்றில் நேற்று 20 தொழிலாளர்கள் தேசூர் ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். கனபராகி கிராமம் அருகேவந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து உருண்டது. இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக பெலகாவியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்தது. காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வாகனம் கல்யால் பகுதியில் உள்ள சிறிய பாலம் அருகே வந்தபோது வாகனத்தின் வேகத்தை குறைக்க டிரைவர் பீமேஷ் முயன்றுள்ளார். ஆனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து பள்ளத்தில் விழுந்து உருண்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மாரேஹால் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory