» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குஜராத் கலவரத்தில் நரேந்திர மோடிக்கு தொடர்பு இல்லை : மேல் முறையீடு தள்ளுபடி

வெள்ளி 24, ஜூன் 2022 4:37:12 PM (IST)

குஜராத் கலவரத்தில் அப்போதைய முதல்வர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என்ற சிறப்பு விசாரணை குழுவின் முடிவை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

குஜராத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா கரசேவகர்கள் வந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்குத் தீ வைக்கப்பட்டது. இதில் 59 பேர் பலியாகினர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் மதக் கலவரம் மூண்டது. அப்போது அகமதாபாத்தில் உள்ள குல்பர்க் சொசைட்டி பகுதியில் நடந்த வன்முறையில் 68 பேர் கொல்லப்பட்டனர்.

இதில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. இசன் ஜாப்ரியும் கொல்லப்பட்டார். இந்த கலவரம் தொடர்பாக விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த சிறப்பு விசாரணைக் குழு 2012-ம் ஆண்டு, டிசம்பர் 8-ம் தேதி தாக்கல் செய்த அறிக்கையில் அப்போது முதல்வராக இருந்த மோடி, முக்கிய காவல்துறை அதிகாரிகள் சதி செய்ததாக கூறப்பட்ட புகாரை மறுத்தது.

எஸ்ஐடியின் அறிக்கையை மறு ஆய்வு செய்யக்கோரி அகமதாபாத் நீதிமன்றத்தில் இசன் ஜாப்ரியின் மனைவி ஜாகியா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து குஜராத் உயர் நீதிமன்றத்திலும் மனு தள்ளுபடியானதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாப்ரி, சமூக ஆர்வலர் தீஸ்தா சீதல்வத் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

இதுகுறித்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில் ‘‘இந்த வழக்கின் விசாரணை மற்றும் இறுதி அறிக்கையை கையாள்வதில் மாஜிஸ்திரேட் மற்றும் குஜராத் உயர் நீதிமன்றத்தின் அணுகுமுறையில் விதிமீறல் எதுவும் இல்லை. மேல் முறையீட்டாளரின் வாதத்தை ஏற்க முடியாது. கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி காவல்துறை அறிக்கையை ஏற்று, எதிர்தரப்பு மனுவை நிராகரித்த மாஜிஸ்டிரேட் நீதிமன்ற நீதிபதியின் முடிவை நாங்கள் ஏற்கிறோம். நீதிமன்றத்தில் ஆய்வு மற்றும் முடிவில் எந்த விதிமீறலும் இல்லை’’ எனக் கூறினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory