» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சீனர்களுக்கு விசா பெற்றுத்தர ரூ.50 லட்சம் லஞ்சம்: முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு
வெள்ளி 20, மே 2022 3:24:36 PM (IST)
சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி பெற்றுத் தர ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரும் ஆடிட்டருமான பாஸ்கர் ராமனை, சிபிஐ சென்னையில் 17-ந்தேதி நள்ளிரவில் கைது செய்து, நேற்று சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க 4 நாட்கள் அவகாசம் அளித்து சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் சார்பில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படக்கூடும் என்று அஞ்சி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
akkini kunjuமே 20, 2022 - 09:11:09 PM | Posted IP 162.1*****
appanum maganum nalla thirudurenga daaaa
மேலும் தொடரும் செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை: திருவனந்தபுரம் அருகே சோகம்!
சனி 2, ஜூலை 2022 5:46:56 PM (IST)

டெல்லியில் இருந்து ஜபல்பூர் புறப்பட்ட விமானத்தில் நடுவானில் புகை: பயணிகள் பீதி!!
சனி 2, ஜூலை 2022 4:48:33 PM (IST)

உதய்பூர் படுகொலையில் கைதானவர் பாஜக உறுப்பினர்: காங்கிரஸ் புகார் - பாஜக மறுப்பு!
சனி 2, ஜூலை 2022 3:44:12 PM (IST)

அக்னிபாதை திட்டத்தில் ராணுவம், கடற்படையில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!!
சனி 2, ஜூலை 2022 12:00:55 PM (IST)

பிரதமர் மோடியை 3வது முறையாக புறக்கணித்த சந்திரசேகர் ராவ்: சின்ஹவுக்கு வரவேற்பு!
சனி 2, ஜூலை 2022 11:56:08 AM (IST)

வயநாட்டில் அடித்து நொறுக்கப்பட்ட எம்பி அலுவலகம் : ராகுல் காந்தி பார்வையிட்டார்
வெள்ளி 1, ஜூலை 2022 5:28:24 PM (IST)

ஒண்மைமே 25, 2022 - 05:33:21 PM | Posted IP 162.1*****