» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
தனித்து நிற்கும் திருவள்ளுவர் கோட்பாடுகள் : பிரதமர் மோடி புகழாரம்
சனி 15, ஜனவரி 2022 9:42:17 AM (IST)
"திருவள்ளுவர் கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கு ஏற்றவை. தனித்து நிற்கின்றன" என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருவள்ளுவர் தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது கோட்பாடுகள் அறிவுத்திறன்மிக்க நடைமுறைக்கேற்றவை. பன்முகத்தன்மை - அறிவுசார் ஆழத்திற்காக அவை தனித்து நிற்கின்றன. கடந்த ஆண்டு நான் கன்னியாகுமரியில் எடுத்த திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் நினைவகத்தின் காணொலியை பகிர்கிறேன் என பிரதமர் வெளியிட்டுள்ளார்.