» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சுற்றுலா, சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் : அரவிந்த் கேஜரிவால் அறிவிப்பு
செவ்வாய் 21, செப்டம்பர் 2021 5:22:09 PM (IST)
டெல்லியில் கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட சுற்றுலா, சுரங்கத் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.5ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் அரவிந்த் கேஜரிவால் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனாவின் அலை மிகத் தீவிரமாக இருந்து வரும் நிலையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பணிபுரிபவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகிறார்கள். இதனால் முக்கியமாக சுற்றுலா மற்றும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக மாதம் ரூ.5000 வழங்கப்படும் என முதல்வர் கேஜரிவால் தெரிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு பொது மக்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.