» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
துப்பாக்கியுடன் செல்பி எடுக்கும் போது குண்டு பாய்ந்து புதுப்பெண் பலி: உத்தர பிரதேசத்தில் பரபரப்பு
ஞாயிறு 25, ஜூலை 2021 5:10:45 PM (IST)
உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியுடன் செல்பி எடுக்கும் போது குண்டு பாய்ந்து புதுப்பெண் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் என்ற இடத்தில் வசித்தவர் ராதிகா. இவருக்கு கடந்த மே மாதம்தான் திருமணம் நடந்தது. ராதிகாவின் மாமனார் ராஜேஷ் குப்தா ஜூவல்லரி வைத்திருக்கிறார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வாங்கி வைத்திருந்தார்.
அந்த துப்பாக்கியை உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலுக்காக போலீஸில் சரண்டர் செய்திருந்தார். தேர்தல் முடிந்துவிட்டதால் இரண்டு நாட்களுக்கு முன்புதான் ராஜேஷ் மகன் ஆகாஷ் போலீஸ் நிலையத்திற்கு சென்று துப்பாக்கியை வீட்டிற்கு வாங்கி வந்தார். அவற்றை ராஜேஷ் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் வைத்திருந்தார். வீட்டில் புதிதாக துப்பாக்கியை கொண்டு வந்து வைத்ததும் அதனை எடுத்துப்பார்த்தார்.
ராதிகாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது தந்தை ராகேஷ் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். துப்பாக்கியையும், ராதிகா எடுத்த செல்பி போட்டோவையும் கைப்பற்றிய போலீசார், முதற்கட்ட விசாரணையில், ராதிகாவின் உடலில் ஒரு குண்டு பாய்ந்தது மட்டுமே தெரிய வந்துள்ளதாகவும், கைகலப்பு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.