» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வாகன பேட்டரிகள் தயாரிப்புக்கு ரூ.18,100 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வியாழன் 13, மே 2021 12:14:47 PM (IST)



வாகன பேட்டரிகள் தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.

நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாக்கவும், காற்று மாசை குறைக்கவும், பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதன் ஒரு நடவடிக்கையாக பேட்டரிகளால் இயக்கப்படும், மின்சார வாகனங்களை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்தது. இதில், வாகன பேட்டரிகள் தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது பற்றி, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது: வாகன பேட்டரிகள், 50 ஜிகா வாட்ஸ் சக்தி அடங்கியதாக இருக்கும். இதன் தயாரிப்பை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கு, 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது. இதனால், வாகன பேட்டரி தயாரிப்பில், சர்வதேச அளவில் இந்தியா முன்னிலை பெறும். இதனால், பேட்டரிகளை அதிகளவில் பயன்படுத்தும் மின்னணு பொருட்கள், மின்சார வாகனங்கள், சூரிய மின் தகடுகள் ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Arputham Hospital






Thoothukudi Business Directory