» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசு : மஹிந்திரா அறிவிப்பு
சனி 23, ஜனவரி 2021 5:29:03 PM (IST)
நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு தனது நிறுவன தயாரிப்பு காரை பரிசாக வழங்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் உள்பட 6 இளம் வீரர்களுக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யுவி ரக ஜீப் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ஆறு இளம் வீரர்கள் தங்களது அறிமுகப் போட்டியிலேயே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் சாத்தியமில்லாததை கனவு காண்பதையும், அதனை சாத்தியப்படுத்துவதையும் இவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.பல தடைகளைத் தாண்டி இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இளம் வீரர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்காக எனது சொந்த செலவில் இந்த பரிசை வழங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களிடம் பாஜக கொள்ளையடிக்கிறது : மம்தா ஆவேசம்
திங்கள் 8, மார்ச் 2021 11:15:43 AM (IST)

கரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் தடுப்பூசிகள்: பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உத்தரவு
ஞாயிறு 7, மார்ச் 2021 9:13:14 AM (IST)

பி.எல்.ஐ திட்டம் 5 ஆண்டுகளில் உற்பத்தியை 52,000 கோடி டாலராக உயர்த்தும் : பிரதமர் மோடி பேச்சு
சனி 6, மார்ச் 2021 3:45:16 PM (IST)

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா சான்று கட்டாயம்: - தேவஸ்தானம் அறிவிப்பு
சனி 6, மார்ச் 2021 11:24:47 AM (IST)

அமெரிக்க டாலர் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு: ஸ்வப்னா சுரேஷ் தகவல்
சனி 6, மார்ச் 2021 8:12:39 AM (IST)

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுமா? நிர்மலா சீதாராமன் பதில்
சனி 6, மார்ச் 2021 8:09:48 AM (IST)
