» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியாவில் கரோனா தடுப்பு மருந்து: ஆகஸ்ட் 15 முதல் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு...?
வெள்ளி 3, ஜூலை 2020 10:41:18 AM (IST)
இந்தியாவில் ஆகஸ்ட் 15 முதல் கரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கோவாக்சின் இந்தியாவின் தேசிய வைராலஜி நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது என்று பாரத் பயோடெக் தலைவர் டாக்டர் கிருஷ்ணா எலா தெரிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை இந்த தடுப்பூசி நிரூபிக்கிறது என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் புதிய வகையான வைரஸ் என்பதால், இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது கடும் சவாலான பணியாக உள்ளது என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை உலக அளவில் 17 தடுப்பு மருந்துகள் மனிதர்களிடையே பரிசோதிக்கப்பட்டுள்ளது.
உலகில் செயல்பட்டு வரும் 148 தடுப்பூசி சோதனைகளில் 5 இந்திய நிறுவனங்களிடமிருந்தோ அல்லது இந்திய நிறுவனங்களின் பங்களிப்பில் முயற்சியிலோ நடந்து வருகிறது. இதில் குஜராத்தின் ஜைடஸ் காடிலா நிறுவனமும் உள்ளது. அதே நிறுவனம் 2010 இல் நாட்டில் பன்றிக்காய்ச்சலுக்கான முதல் தடுப்பூசியை தயாரித்தது.
கூடுதலாக, பாரத் பயோடெக் மற்ற நோய்த்தடுப்பு மருந்துகள், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்ற நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுடன் சேர்ந்து தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், ஜைடஸ் கடிலா என்ற நிறுவனமும் கரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் தயாரிப்பு மருந்துக்கும் மனிதர்களிடையே முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகளை தொடங்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி கொடுத்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் முதல் உள்நாட்டு கரோனா தடுப்பூசியை வெளியிட இந்தியா திட்டமிடுகிறது ஆகஸ்ட் 15 முதல் கரோனா தடுப்பு மருந்து கோவாக்சின் பயன்பாட்டுக்கு வர வாய்ப்பு உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
மருத்துவ பரிசோதனைகள் நாடு முழுவதும் 12 நிறுவனங்களில் நடைபெறுகிறது. ஐ.சி.எம்.ஆர் இந்த நிறுவனங்களை தடுப்பூசியின் விரைவான மருத்துவ பரிசோதனைகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது, ஏனெனில் இது "அரசாங்கத்தின் மிக உயர்ந்த மட்டத்தில் கண்காணிக்கப்படும்" "முன்னுரிமை திட்டங்களில்" ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நிறுவனங்களுக்கு எழுதிய கடிதத்தில், அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் முடிந்தபின், ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் பொது சுகாதார பயன்பாட்டிற்கான தடுப்பூசியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இறுதி முடிவு இந்த திட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து மருத்துவ சோதனை தளங்களின் ஒத்துழைப்பைப் பொறுத்தது" என்று அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகள் விசாகப்பட்டினம், ரோஹ்தக், புதுடெல்லி, பாட்னா, பெல்காம் (கர்நாடகா), நாக்பூர், கோரக்பூர், கட்டங்கொளத்தூர் (தமிழ்நாடு), ஐதராபாத், ஆர்யா நகர், கான்பூர் (உத்தரபிரதேசம்) மற்றும் கோவாவில் உள்ளன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வேளாண் சட்டங்கள் தொடர்பான 9ஆம் கட்டப் பேச்சுவார்த்தையும் தோல்வி
வெள்ளி 15, ஜனவரி 2021 6:41:02 PM (IST)

விவசாயிகள் மரணத்தைப் பற்றி மத்திய அரசுக்கு கவலை இல்லை : ராகுல்காந்தி விமர்சனம்
புதன் 13, ஜனவரி 2021 5:01:14 PM (IST)

கரோனா அச்சுறுத்தல் : குஜராத் கோயில்களில் விழுந்து சுவாமி கும்பிட தடை
புதன் 13, ஜனவரி 2021 4:55:04 PM (IST)

சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு 5 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி : தேவசம் போர்டு
செவ்வாய் 12, ஜனவரி 2021 5:19:41 PM (IST)

வேளாண் சட்டங்களுக்கு இடைக்காலத்தடை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செவ்வாய் 12, ஜனவரி 2021 4:35:26 PM (IST)

கோவிஷீல்டு தடுப்பூசியின் விலை ரூ. 200: சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அறிவிப்பு
திங்கள் 11, ஜனவரி 2021 8:37:20 PM (IST)
