» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
வெள்ளி 29, நவம்பர் 2019 12:35:20 PM (IST)

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு, ராஷ்டிரபதி பவனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த அதிபர் தேர்தலில், மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபய ராஜபக்ச அமோக வெற்றிபெற்று, அதிபராக பதவியேற்றார். அதன்பிற்கு, இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க பதவி விலகியதை தொடர்ந்து, இடைக்கால பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், அதிபராக பொறுப்பேற்றபிறகு, முதல் வெளிநாட்டு பயணமாக கோத்தபய ராஜபக்ச இந்தியாவுக்கு வந்துள்ளார். நேற்று டில்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய கோத்தபய ராஜபக்சவுக்கு, சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.இந்நிலையில், இன்று காலை ராஷ்டிரபதி பவனில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. காரில் வந்திறங்கிய இலங்கை அதிபரை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர், முப்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக்கொண்ட இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சவுக்கு, சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச,”இலங்கை அதிபராக நான் இருக்கும் இந்த ஆட்சிக் காலத்தில், இலங்கை – இந்தியா உறவுகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்ல விரும்புகிறேன். இருநாடுகளும், நீண்ட நிலையான நல்லுறவை வைத்துள்ளன. இருநாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றில் இருநாடுகளின் இணைந்து பணியாற்றவேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பழைய நூறு ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படும்: ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்
சனி 23, ஜனவரி 2021 5:47:28 PM (IST)

இந்தியாவுக்கு சுழற்சி முறையில் 4 தலைநகரங்கள் வேண்டும் : மேற்கு வங்க முதல்வர் மம்தா பேச்சு
சனி 23, ஜனவரி 2021 5:42:48 PM (IST)

நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசு : மஹிந்திரா அறிவிப்பு
சனி 23, ஜனவரி 2021 5:29:03 PM (IST)

எல்லையில் சீனா படைகளை திரும்பப் பெறாவிட்டால் இந்தியாவும் பின்வாங்காது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
சனி 23, ஜனவரி 2021 4:47:37 PM (IST)

பெங்களூரு சிறையில் இருக்கும் இளவரசிக்கும் கரோனா தொற்று உறுதி
சனி 23, ஜனவரி 2021 3:25:26 PM (IST)

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பாா்: பிரதமா் மோடி
சனி 23, ஜனவரி 2021 11:27:29 AM (IST)
