» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
காந்திக்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகம்: கோட்சே ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு
ஞாயிறு 17, நவம்பர் 2019 6:34:15 PM (IST)
மகாத்மா காந்திக்கு எதிராக வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் விநியோகித்த கோட்சே ஆதரவாளர்கள் மீது மத்தியப் பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து குவாலியர் நகரம் இந்து மகாசபா நடவடிக்கைகளில் ஒரு முக்கிய மையமாக இருந்து வருகிறது. மேலும், குவாலியரில் உள்ள இந்து மகாசபா ஆர்வலர்கள் பல ஆண்டுகளாக கோட்சேவை வணங்கி வருகின்றனர். கடந்த 2017ம் ஆண்டு குவாலியரில் அவரது சிலையை நிறுவ முயன்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் அந்த சிலையைக் கைப்பற்றி சிலை நிறுவுவதற்கு தடை விதித்தது.
இந்நிலையில், நாதுராம் கோட்சேவின் 70வது தியாக நாளில் ((நவம்பர் 15, 1949), (15.11.2019, வெள்ளிக்கிழமை) அவரது செயற்பாட்டாளர்கள் கோட்சேவை வணங்கியதோடு, மகாத்மா காந்தியை இழிவுபடுத்தும் துண்டு பிரசுரங்களை விநியோகித்துள்ளனர். காங்கிரஸ் ஆர்வலர் ரவீந்திர சவுஹான் அளித்த புகாரின் பேரில் மத்தியப்பிரதேச காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துண்டு பிரசுரங்களை விநியோகித்த நபர்களை கைது செய்யும் முயற்சியில் குவாலியர் போலீஸார் ஈடுபட்டுள்ளனர் என மாநில சட்டத்துறை அமைச்சர் பி.சி. சர்மா தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

என்னுடைய மூதாதையர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்: பிரபல தொழில் அதிபர் பெருமை
வியாழன் 12, டிசம்பர் 2019 5:29:18 PM (IST)

அயோத்தி தீர்ப்பை எதிர்த்து தொடரப்பட்ட சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி
வியாழன் 12, டிசம்பர் 2019 5:10:38 PM (IST)

தெலங்கானாவில் 4 பேர் என்கவுன்ட்டர்: நீதி விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 12, டிசம்பர் 2019 5:03:26 PM (IST)

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்
வியாழன் 12, டிசம்பர் 2019 3:42:55 PM (IST)

குடியுரிமைத் திருத்த மசோதா குறித்து அசாம் மக்கள் அச்சப்பட வேண்டாம்: பிரதமர் மோடி
வியாழன் 12, டிசம்பர் 2019 10:41:34 AM (IST)

தமிழகத்தில் ஊராட்சி தேர்தல் நடத்த தடை இல்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வியாழன் 12, டிசம்பர் 2019 10:38:04 AM (IST)

உண்மைNov 17, 2019 - 10:51:08 PM | Posted IP 162.1*****