தூத்துக்குடியின் வரலாறு (4 of 10)

போர்ச்சுக்கீசியர் தூத்துக்குடியில் நடத்திய அமைதியான, லாபகரமான வியாபாரம், டச்சுக்காரர்களின் பொறாமைக்கு இலக்கானது. கிபி1649ல் பிப்ரவரி மாதம் 4ம் நாள் ஆளுநர் ஜெ.எம்.சுவிட்சரின் இராணுவ தளபதியின் தலைமையில் டச்சு, சிங்கள போர் வீரர்களுடன், பத்து கப்பல் கொண்ட ஓர் பெரிய கப்பல் படையை அனுப்பி தாக்கினார்கள். கடற்கரை வழியாக வந்து தூத்துக்குடியை திருச்செந்தூர் கோயிலையும் கைப்பற்றி பொருட்களையும் கொள்ளையடித்து சென்றனர்.


மீண்டும் 1658ல் ஒரு வலிமை மிக்க படையெடுப்பு செய்து தூத்துக்குடி துறைமுகத்தை தாக்கி பிடித்துக்கொண்டனர். தூத்துக்குடியை "மதுரை கடற்கரை"யின் தலைமையிடமாக அமைத்துக் கொண்டனர். இந்த மதுரை கடற்கரையில் அடங்கியுள்ள கிராமங்கள், வேம்பார், வைப்பார், புன்னக்காயல், காயல்பட்டினம், பழையகாயல், மணப்பாடு, ஆழ்வார்திருநகரி போன்றவையாகும். முத்துச்சிப்பி துறை தூத்துக்குடியை மேற்பார்வையிட ஓர் அரச படை அதிகாரியை நியமித்தனர்.

 
பாம்பனிலிருந்து கன்னியாகுமாரி வரையுள்ள வீரர்களையும், வலிமையுள்ள ஓர் தளபதியையும் கொண்ட கப்பற்படை ஒன்றை இங்கு நிலைநிறுத்தி வைத்தனர்.

கிபி 1650 முதல் 1700 வரை தூத்துக்குடியின் நகரம், துறைமுகம், முத்துக்குளித்துரை இவைகளின் வரலாற்றை அறிய ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. 5,000 மக்கள் வசித்த தூத்துக்குடிதான் அன்று கடற்கரையிலுள்ள 7 கிராமங்களில் மிக புகழ்பெற்றதாகயிருந்தது.


தூத்துக்குடி துறைமுகம் 18அடி ஆழமுள்ளதாகச் சொல்ல்பபடுகிறது. அக்டோபர் மாதம் கடலில் அமைதி நிலவும்போது கடலிலிருந்து 78முதல் 90அடி ஆழ தூரத்தில் முத்துக்குளிப்பு தொழில் நடந்தது. 1675ல் தூத்துக்குடி துறைமுகம் கம்பீரமான தோற்றமுடைய துறைமுக நகரம் உருவாகியது.


Favorite tags



Thoothukudi Business Directory