தூத்துக்குடியின் வரலாறு (3 of 10)

தூத்துக்குடி வந்துசேர்ந்த போர்ச்சுக்கல் படை மூர்களை முழுவதுமாக தோற்கடித்து துறைமுகத்தை மூர்களிடமிருந்து மீட்டு பரவர்களிடம் கொடுத்தது. எந்த விதமான முகமாற்றமும் இல்லாமல் பரவர்கள் கிருஸ்தவ மதத்திற்கு மாறினார்கள்.

தூத்துக்குடி கிபி 1532லிருந்து 1658 வரை போர்ச்சுகீசியர்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. இங்கு ஒரு நிலையான இராணுவம் நிறுத்தப்பட்டு கோட்டைகள் கட்டப்பட்டது. முத்துக்குளித்தல் சிறப்பாக நடைபெற்றது. போர்ச்சுக்கல் மன்னனுக்கு வரி செலுத்தப்பட்டு துறைமுகம் உருவாக ஆரம்பித்தது.


தூத்துக்குடியில் டச்சுக்காரர்கள் (கிபி 1658-1825)

தூத்துக்குடி போர்ச்சுகீசியர்களின் வசம் இருந்தபோது "புனித சவேரியாரின்" அருட் தொண்டால் தூத்துக்குடியின் அருகில் உள்ள பகுதிகளிலும் கிருஸ்துவ மதம் பரவியது. முத்துக்குளித்தலும் வியாபாரமும் நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போதுதான் டச்சுக்காரர்கள் தங்கள் வியாபார தலத்தை இலங்கையில் கிபி1602ல் ஏற்படுத்தினர்.


இதுவரை ஐரோப்பாவில் கடல் வணிகத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆங்கிலேயரும், டச்சுக்காரரும் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் தலைகாட்டவில்லை. அதற்கும் ஒரு காரணம் உண்டு. அந்த காலத்தில் ஐரோப்பா முழுவதும் ஒரு கிருஸ்தவ மரபை பின்பற்றியதால் உலக கத்தோலிக்க மதகுரு போப்பாண்டவர் ஆறாம் அலெக்சாந்தர் வெளியிட்ட ஓர் ஆணையின்படி உலகில் கடல் கடந்து வியாபாரம் செய்யும் உரிமைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு பிரிக்கப்பட்டன. 


கீழ்த்திசை நாடுகளில் வியாபார உரிமை போர்ச்சுக்கலுக்கும், மேல்திசை நாடுகளில் அவ்வுரிமை ஸ்பெயினுக்கும் கொடுக்கப்பட்டது. ஆனால் 16ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மதசீர்திருத்த இயக்கத்தால் கிறிஸ்தவ மதம் பிளவுபட்டது. போப்பாண்டவரின் அதிகாரமும் செல்வாக்கும் முன்போல் செயல்படவில்லை.
 
இந்த பின்னனியில் போப்பின் அதிகாரத்தை உதறிய ஆங்கிலேயரும், டச்சுகாரரும் வியாபார மையங்கள் அமைக்க கீழ்நாடுகளுக்கு வரத் துவங்கினர். இந்தக் காலக்கட்டத்தில்தான் தூத்துக்குடி ஒருவர் கைமாறி மற்றொருவர் கைக்கு போகக்கூடிய நிலை ஏற்பட்டது.


Favorite tags



Thoothukudi Business Directory