தூத்துக்குடியின் வரலாறு (10 of 10)

இக்கால கட்டத்தில்தான் நம்நாடு சுதந்திரம் அடைந்தது. அதன்பிறகு 1949-ல் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பெயரில் ஒரு சுதேசி நீராவி கப்பல் தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து கடலில் செலுத்தப்பட்டது. சிதம்பரம்பிள்ளை அவர்களின் ஞாபகச் சின்னமாக இந்த கப்பலை அன்று இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த சி.ராஜகோபாலச்சாரியார், கடலில் மிதக்கவிட்டார்.

ஒரு புதிய திட்டத்தை வகுத்து கொடுத்தார். இதற்கிடையில் சேதுசமுத்திரம் கால்வாய் திட்டத்தையும் அதனால் தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஏற்படும் விளைவுகளை யெல்லாம் கணிக்க சர்.ஏ.ராமசாமி முதலியார் தலைமையின்கீழ் ஒரு புதுக்குழு, தூத்துக்குடி துறைமுகத்தை உடனடியாக விரிவாக்குவதன் அத்தியாவசியத்தை கோடிட்டுக்காட்டி, அதனால் சேது சமுத்திர திட்டமும், தென் மாநிலமும் பயனடையும் வாய்ப்புகளையெல்லாம் தங்கள் அறிக்கையில் பரிந்துரைத்தனர்.

தூத்துக்குடி துறைமுக நிறைவு திட்டத்தில் மக்களின் ஒன்று திரண்ட ஆர்வத்தை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் காட்டிய ஆண்டு 1956 என்று உறுதியாகக் கூறலாம். மக்களின் நீண்ட நாள் ஆவலின் ஒளிமயமான அடையாளமாக அந்த வருடத்தில்தான், தூத்துக்குடியின் இன்றைய புதிய துறைமுகத்தின் மூலைக் கல்லை நாட்டிய, தூத்துக்குடி துறைமுக அபிவிருத்தி சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. இதற்குபின்னர்தான் மக்களின் ஆக்கபூர்வ முயற்சியெல்லாம் ஒருமுகப்படுத்தப்பட்டு, துறைமுக வளர்ச்சி பணித்திட்டம் வேகமடைந்தது.
 
இந்த சங்கத்தின் ஆதரவில் வியாபார கழக உறுப்பினர்கள், பழைய துறைமுக அறக்கட்டளை அங்கத்தினர்கள் அடங்கிய ஓர் தூதுக்குழு மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டது. இவர்கள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, திட்டக்குழு தலைவர், இதர சம்பந்தப்பட்ட மாநில, மத்திய அமைச்சர்களையெல்லாம் சந்தித்து இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டு திட்டகால அளவில் தூத்துக்குடி துறைமுகத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டிய அவசியத்தை அவர்கள் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்தது. பிரதமர் வாக்குறுதியின்படி திரு.பி.மதிராணியும், திரு. ஜெ.டி.சாக்கோவும் ஆராய்ச்சி செய்து, தமது அறிக்கையில் துறைமுக வளர்ச்சியை பரிந்துரைத்தனர்.
 
இறுதியில் மூன்றாவது ஐந்தாண்டு திட்டத்தில் 1963ல் ஆழ்கடல் துறை வளர்ச்சி பணிகள் துவங்கியது. இது 1944ல் 73கோடி ரூபாயில் முடிவுற்றது. இன்றைய புதிய ஆழ்கடல் துறைமுகம் 1974ல் ஜூலை 11ம் தேதிதான் சேவையை துவக்கியது. இது இந்தியாவில் பத்தாவது பெரிய துறைமுகமாக அறிவிக்கப்பட்டது.1979ல் பழைய துறைமுகமும் புதிய ஆழ்கடல் துறைமுகமும் ஒன்றிணைக்கப்பட்டது.
 
பழைய துறைமுகம் "பி" பகுதி எனவும், புதிய துறைமுகம் "ஏ" பகுதி எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு துறைமுகமாக இருந்த தூத்துக்குடி துறைமுகம் இன்று நவீனமயமாக்கப்பட்டு இந்தியாவின் 10வது பெரிய துறைமுகமாக விளங்குகிறது.

« Prev5678910Next »

Favorite tags



Thoothukudi Business Directory